தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 7, 2015

கர்நாடகத்தில் விவசாயிகள் பந்த் எதிரொலி: தமிழக பேருந்துகள் நிறுத்தம்


சத்தியமங்கலம்,ஆக 5:
கர்நாடகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக விவசாயிகள் சனிக்கிழமை மேற்கொண்ட பந்த் காரணமாக இரு மாநிலங்களிடையே அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகத்துக்கு இயக்கப்படவில்லை.பந்த் பற்றிய அறிவிப்பு தெரியாத பயணிகள் சத்தி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். தொடர்ந்து, பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சத்தியில் இருந்து தாளவாடி,புளிஞ்சூர் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தாளவாடியில் இரு மாநில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால் அங்கிருந்து கர்நாடகத்துக்கு பயணிகள் புறப்பட்டு சென்றனர்.பிற்பகலில் முதல் இரு மாநில அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

0 comments:

Post a Comment