சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த வேன்
சத்தியமங்கலம்,ஆக 8:
சத்தியமங்கலம்
அடுத்துள்ள வாணிப்புத்தூர் பகுதியில் நெல் நடவுக்கான எந்திரம் வாடகைக்கு
விடப்படுகிறது. இந்த எந்திரத்தை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்று
தூக்கநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தது. இதன்
ஓட்டுநர் வேணுகோபால் அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்றார்.அப்போது,சரிவான
பாதையில் நின்றுகொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக நகர்ந்துவந்து சாலையோர
பள்ளத்தில் கவிழ்ந்தது. தானாகவே செல்லும் வேனை பார்த்த அப்பகுதி மக்கள்
அதனை தடுக்க முயற்சி மேற்கொண்ட போதிலும் வேன் விபத்துக்குள்ளானது.அங்கு
வந்த போலீஸார் மீட்பு வாகனம் மூலம் வேனை அப்பறப்படுத்தி போக்குவரத்தை
சீர்படுத்தினர்.
0 comments:
Post a Comment