தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 29, 2015

சத்தியில் அரசு கலைக் கல்லூரி அறிவிப்பு:  அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
 
 

சத்தியமங்கலம்,செப் 29:
சத்தியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்ததையடுத்து சத்தியில் அதிமுவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

சத்தியமங்கலம் பகுதியில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமாக வசிப்பதால் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சத்தியமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என முதலவர் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக சென்று சத்தி-கோவை சாலையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி, வி.சி. வரதராஜ், சத்தி இந்திய கம்யூ கட்சி தாலுக்கா செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் எம்.பி,துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment