சத்தியமங்கலம்- ஆக்கிரமிப்பு பால் பண்ணை, கோவில்கள் இடிப்பு
சத்தியமங்கலம்,ஆக 8:
சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்துக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பால் பண்ணை மற்றும் கோவில்கள் இடிக்கப்பட்டன.
சத்தியமங்கலம்
சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக 1996-ஆம் ஆண்டு சத்தி மைசூர் சாலையில்
1.46 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் இந்த
நிலத்தை ஆக்கிரமித்து முத்துமாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில்
கட்டி வழிபட்டு வந்தனர். மேலும் ஒரு பால் பண்ணையும் செயல்பட்டு வந்தது.
தற்போது இந்த இடத்தில் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியல் எஸ்.பிரபாகர்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் மற்றும் பால் பண்ணையை அகற்றுமாறு சத்தி
வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சத்தி வட்டாட்சியர்
வீ.வேணுகோபால்,டிஎஸ்பி மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பால் பண்ணை
அகற்றப்பட்டன. மேலும், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அதே பகுதியில் 11
சென்ட் நிலம் கோவில் கட்ட ஒதுக்கப்படுவதாக வட்டாட்சியல் வீ.வேணுகோபால்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment