சத்தியில் விநாயகர் சதுர்த்தி விழா
சத்தியமங்கலம், செப் 17:
சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.
விழாவையொட்டி,
அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி
ஹோமத்துடன் விநாயகர் பூஜை துவங்கியது. சத்தியமங்கலம் பவானிஆற்றுப்
பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு கொழுக்கட்டை படையல் படைக்கப்பட்டு
பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து விநாயகர் அருங்கம்புல் மாலையில்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது. பவானீஸ்வரர் ஆலயம், வடக்குப்பேட்டை வரசித்தி விநாயகர் ஆலயம்
உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 120 இடங்களில்
விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன
0 comments:
Post a Comment