புன்செய் புளியம்பட்டியில் பாரதி நினைவு நாள்
புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 11: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள வகுத்துகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பாரதி நினைவு நாள் அனுசரிக்கபட்டது.
பள்ளியின் இடைநிலை ஆசிரியர் அருள்முருகன் வரவேற்றார். விடியல் சமூகநல
இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர்
ஆசிரியர் சங்க தலைவர் வி.கே.சின்னசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்
மகாகவி பாரதியாரின் திருஉருவ படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர். பாரதியாரின் பாடல்களை மாணவ மாணவியர்கள் பாடினார்கள். மதியம்
பாரதி வாழ்கை வரலாற்று படம் திரையிட பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ
மாணவியர்கள் அனைவரும் பாரதி உருவம் பதித்த முகமூடி அணிந்து பங்கேற்றனர்.
நிறைவாக முன்னாள் மாணவர் கே.சக்திவேல் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment