சத்தியில் சாலைப் பணியாளர்கள் சங்கக்கூட்டம்
சத்தியமங்கலம்,செப் 17:
தமிழ்நாடு
நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கக்கூட்டம் செயலாளர்
எஸ்.எஸ்.பாலமுருகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.தலைவர்
கே.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பணியாளர்களுக்கு பணி
வழங்காத 41 மாத காலத்தை பணிகாலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும். சாலை
பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல்
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 comments:
Post a Comment