நகராட்சி எருக்கிடங்கில் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
சத்தியமங்கலம், செப் 10:
சத்தியமங்கலம் நகராட்சி எருக்கிடங்கில் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு புகை சூழ்ந்து புகைமண்டலமாக மாறியதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர்.
சத்தியமங்கலம் நகராட்சி எருக்கிடங்கில் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு புகை சூழ்ந்து புகைமண்டலமாக மாறியதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது நகராட்சி
எருக்கிடங்கு. நகராட்சிப் பகுதியில் உள்ள கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு
லாரி,டெம்போ மூலம் எருக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும்
கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் அப்பகுதி அவ்வவ்போது புகைமண்டலமாக
மாறி சுகாதார கேடு ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை எருக்கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கு புகைமூட்டமாக காணப்பட்டது. அதில் எழும் புகையின் துர்நாற்றம் காரணமாக அரசு மருத்துவமனை நோயாளிகள் சுவாசகோளாறால் அவதிப்பட்டனர்.மேலும், கொமராபாளையம் பகுதியில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாலை நேரத்தில் ஏற்பட்ட புகைமூட்டத்தில் பள்ளி மாணவ,மாணவியர்கள் அப்பகுதியில் செல்லமுடியாமல் காத்திருந்தனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. நகராட்சி எருக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் இந்த புகைமூட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் இப்பிரச்னைக்கு நகராட்சி தீர்வு காண வேண்டும் என சத்தி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை எருக்கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கு புகைமூட்டமாக காணப்பட்டது. அதில் எழும் புகையின் துர்நாற்றம் காரணமாக அரசு மருத்துவமனை நோயாளிகள் சுவாசகோளாறால் அவதிப்பட்டனர்.மேலும், கொமராபாளையம் பகுதியில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாலை நேரத்தில் ஏற்பட்ட புகைமூட்டத்தில் பள்ளி மாணவ,மாணவியர்கள் அப்பகுதியில் செல்லமுடியாமல் காத்திருந்தனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. நகராட்சி எருக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் இந்த புகைமூட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் இப்பிரச்னைக்கு நகராட்சி தீர்வு காண வேண்டும் என சத்தி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment