கர்நாடக பஸ்கள் இயக்கப்படாததால் தாளவாடியில் இயல்பு நிலை பாதிப்பு. இருமாநில போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலம்,
செப்.3. அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால்
கர்நாடக மாநிலத்தில் அரசுபஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக
திண்டுக்கல் & பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழகத்திற்கு வரும்
கர்நாடக அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சத்தியமங்கலத்திலிருந்து தமிழக அரசு பஸ்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள
பெங்களுரு, மைசூரு, கொள்ளேகால் நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதேபோல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு, பெங்களுரு, குண்டல்பேட்டை, சாம்ராஜ்
நகரிலிருந்து ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு
நகரங்களுக்கு கர்நாடக அரசு பஸ்கள் சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய அரசைக்கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற
பொது வேலைநிறுத்தம் காரணமாக கர்நாடகாவில் அரசுபஸ்கள் இயக்கப்படாததால்
சாம்ராஜ்நகரிலிருந்து தாளவாடிக்கு இயக்கப்படும் பஸ்கள் வரவில்லை. இதனால்
தாளவாடியிலிருந்து சாம்ராஜ்நகர் செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை
ஏற்பட்டது. இதேபோல் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு வரும் கர்நாடக
அரசுபஸ்கள் வராததால் திண்டுக்கல் & பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை
வெறிச்சோடியது. தமிழகத்திலிருந்த கர்நாடக மாநிலத்திற்கு இயக்கபடும் பஸ்கள்
கர்நாட மாநில எல்லையான புளிஞ்சூர் சோத¬ன்சாவடி வரை சென்று திரும்பின.
இதனால் சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பயணிகள்
சத்தியமங்கலம் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர். பஸ்கள் வராததால்
ஏமாற்றமடைந்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோடி
கிடந்தது
0 comments:
Post a Comment