தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 23, 2014

சத்தியமங்கலத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நகராட்சி அலுவலகம்
காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

காணொளி காட்சி மூலம் முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட சத்தி நகராட்சி அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றுகிறார் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்.உடன்,நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், கே.சரவணக்குமார், துணைத்தலைவி என்.திலகவதி நடராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்

சத்தியமங்கலத்தில் ரூ.1 கோடி செலவில் புதிய கட்டப்பட்ட நகராட்சி அலுலகத்தை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

சத்தியமங்கலம் நகராட்சியில் மிகவும் பழமையான அலுவலகத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகம் ரூ.1 கோடி செலவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுவதையொட்டி  சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த நகராட்சி அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.முதல்வர் திறக்கும் நேரத்தில் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றினார்.அப்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் இனிப்பு வழங்கி  கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம்,நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார்,நகர்மன்றத் துணைத்தலைவி என்.திலகவதி நடராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


0 comments:

Post a Comment