தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 26, 2014


தாளவாடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி
 
 
தாளவாடியில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கனரா வங்கி மேலாளர் வெங்கட்ராமன் ரூ.16 இலட்சம் கடன் வழங்கினார்.

தாளவாடி கனரா வங்கி மேலாளர் வெங்கட்ராமன் பேசினார்.
 
விழாவில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்
தாளவாடியில்  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. தாளவாடியில் செயல்பட்டு வரும் மைராடா வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் காமதேனு வள ஆதார சேவை மையத்தின் கீழ் 160 மகளிர் மற்றும் ஆடவர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு கேவிகே திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன் தலைமை தாங்கினார். அலுவலர் திருமதி சிவா முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ், தாளவாடி ஊராட்சித்தலைவர் நஞ்சுண்டநாயக்கர், கனரா வங்கி கிளை மேலாளர் வெங்கட்ராமன், உதவி வேளாண் அலுவலர் முகுந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கடந்த நிதியாண்டில் மட்டும் கனரா வங்கி, நபார்டு மற்றும் சங்கமித்ரா நிதி நிறுவனங்கள் மூலம் மகளிர் மற்றும் ஆடவர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 16 இலட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று 4 குழுக்களுக்கு ரு.16 இலட்சம் கடனாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊராட்சி துணைத்தலைவர் முருகன், நபார்டு அலுவலர் கோபால்ராஜ், சங்கமித்ரா அலுவலர் மகேஷ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சமுதாய வள ஊக்குனர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் காமதேனு வள ஆதார மைய மேலாளர் பசவராஜ் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment