புன்செய் புளியம்பட்டி நகராட்சி கடைகள் ரூ.51 லட்சத்துக்கு ஏலம்
புன்செய் புளியம்பட்டி, செப் 3:
புன்செய புளியம்பட்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட 34 கடைகள் ரூ.51 லட்சத்துக்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய்
புளியம்பட்டியில் சிதிலமடைந்த பழைய பேருந்து நிலைய கட்டடத்தை இடித்துவிட்டு
ரூ.2 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்டும்
பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் செப். மாத இறுதியில் பணிகள்
நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பேருந்து நிலையம் விரைவில்
திறக்கப்பட உள்ளதால் நகராட்சி வணிகவளாகத்தில் உள்ள 34 கடைகளுக்கான பொதுஏலம்
நகராட்சி ஆணையாளர் கே.செந்தில்குமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது. மொத்தம் 34 கடைகள் ரூ.51 லட்சத்துக்கு ஏலம் போனது. தவிர,
வைப்புத்தொகையை ரூ.85 லட்சம் நகராட்சி வருவாய் கிடைத்துள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)
கே.சரவணக்குமார் கூறியது: நகராட்சி கடைகளின் வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3
லட்சத்தில் இருந்து ரூ.51 லட்சமாக உயர்ந்துள்ளது. 1990ம் ஆண்டு பிறகு
தற்போது தான் ஏலம் நடைபெற்றுள்ளது. மேலும், பிற இடங்களில் உள்ள
நகராட்சிக்கு சொந்தமான கடைகளும் பொதுஏலம் நடத்தப்படும். என்றார்.
0 comments:
Post a Comment