உள்ளாட்சி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் வாக்கு சேகரிப்பு
சத்தியமங்கலம்,செப் 1:
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தார்.
தமிழககத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி உறுப்பிர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் செப்.18ம் தேதி நடைபெற உள்ளது. செப்.4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
3வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் பி.பி.அண்ணாதுரையும் சத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு சின்னராஜூம் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளதால், சத்தி சதுமுகை கிராமத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குகேட்டு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்கள்கிழமை பிரசாரத்தை துவக்கி வைத்தார். சதுமுகை, நடுப்பாளையம், ஒட்டர்பாளையம்,சின்னட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் வாக்கு கேட்டனர். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், சத்தி ஒன்றிய செயலாளர்கள் சி.எம்.மாரப்பன், வி.சி.வரதராஜ், சத்தி கொமாராபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தார்.
தமிழககத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி உறுப்பிர்கள் பதவிகளுக்கு இடைத்தேர்தல் செப்.18ம் தேதி நடைபெற உள்ளது. செப்.4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
3வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் பி.பி.அண்ணாதுரையும் சத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு சின்னராஜூம் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளதால், சத்தி சதுமுகை கிராமத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குகேட்டு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்கள்கிழமை பிரசாரத்தை துவக்கி வைத்தார். சதுமுகை, நடுப்பாளையம், ஒட்டர்பாளையம்,சின்னட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் வாக்கு கேட்டனர். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், சத்தி ஒன்றிய செயலாளர்கள் சி.எம்.மாரப்பன், வி.சி.வரதராஜ், சத்தி கொமாராபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment