புதுவடவள்ளி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா
சத்தியமங்கலம்,செப் 1:
சத்தியமங்கலம் புதுவடவள்ளி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆலய வளாகத்தில் சத்தி மறைவட்ட முதன்மைகுரு பாதிரியார் ஏ.மரியபென்சிகர் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் வடவள்ளி, கொடிவேரி, டி.ஜி.புதூர், அவினாசி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாதா கெபியில் செபமாலை பூஜை நடைபெறும். செப்.6-ஆம் காலை 9 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பெங்களூர் உயர்மறை மாவட்ட அருட்பணியாளர் ஜோசப் எம்.ஆபிரகாம் தலைமை தாங்கி புதிதாக கட்டப்பட்டு உள்ள மாதா குளத்தை திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறும். மாதா உருவம் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்து வேனில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் ஆலயத்தை சென்றடையும். செப்.7-ஆம் தேதி ஊட்டி ஆயர் ஏ.அமல்ராஜ் மற்றும் அருட்பணியாளர் அருள் ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இதில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொள்கிறார்கள். சத்தியில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சத்தியமங்கலம் புதுவடவள்ளி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆலய வளாகத்தில் சத்தி மறைவட்ட முதன்மைகுரு பாதிரியார் ஏ.மரியபென்சிகர் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் வடவள்ளி, கொடிவேரி, டி.ஜி.புதூர், அவினாசி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாதா கெபியில் செபமாலை பூஜை நடைபெறும். செப்.6-ஆம் காலை 9 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பெங்களூர் உயர்மறை மாவட்ட அருட்பணியாளர் ஜோசப் எம்.ஆபிரகாம் தலைமை தாங்கி புதிதாக கட்டப்பட்டு உள்ள மாதா குளத்தை திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறும். மாதா உருவம் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்து வேனில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் ஆலயத்தை சென்றடையும். செப்.7-ஆம் தேதி ஊட்டி ஆயர் ஏ.அமல்ராஜ் மற்றும் அருட்பணியாளர் அருள் ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இதில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொள்கிறார்கள். சத்தியில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment