தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 13, 2014

உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி



உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு 15-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு  மற்றும் ராஜன்நகர் ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான இடைத்தேர்தல் செப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு சத்தியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பணிகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மகாதேவன், சத்தி ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர் கே.மூர்த்தி, உதவி அலுவலர் ஏ.சுந்தரம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

0 comments:

Post a Comment