தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 22, 2014

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டு: அதிமுக வெற்றி



சத்தியமங்கலம், செப் 22.

ஈரோடு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.பி.அண்ணாதுரை வெற்றி பெற்றார்.

சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டு பதவிக்கான இடைத்தேர்தல் 18-ஆம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை சத்தி மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  தேர்தல் நடத்தும் அலுவலர் கே.செல்வராஜ் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் அதிமுக வேட்பாளர் பி.பி.அண்ணாதுரை 18,598  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாக்குகள் விபரம்: மொத்த வாக்குகள்:41064, பதிவானவை:23907, பி.பி.அண்ணாதுரை(அதிமுக):18598,சி.சங்கர்(காங்):4735, செல்லாதவை:574

சத்தி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 15-வது வார்டு இடைத்தேர்தலில் சின்னரங்கசாமி(அதிமுக) 2188 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, என்.ரங்கசாமி(பாஜக):994 மற்றும் முருகேசன்(சுயே):298 வாக்குகள் பெற்றனர்.

ராஜன்நகர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் சுப்பிரமணி 1966 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கதிர்வேல்(சுயே) 1143 வாக்குகள் பெற்றார்.  வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கே.செல்வராஜ், ராஜேந்திர பிரசாத் மற்றும் கே.மூர்த்தி ஆகியோர் தகுதி சான்றிதழ் வழங்கினர். போட்டியிட்ட 3 இடங்களிலும் அதிமுக மீண்டும் வெற்றிபெற்றதையடுத்து மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில்  அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பின்னர், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்

0 comments:

Post a Comment