திம்பம்-தலமலைக்கு சிறுத்தையால் தாக்கி பலியான கிருஷ்ணன் பெயர் வைப்பு
புன்செய் புளியம்பட்டி,
செப் 24: சிறுத்தை தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் நினைவாக திம்பம்-தலமலை
வனச்சாலைக்கு கிருஷ்ணன் சாலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தை, புலிகள் உள்ளன. சிறுத்தை நடமாட்டம் அதிகமுள்ள திம்பம் மலைப்பகுதியில் ஜுன் 11-ஆம் தேதி சிறுத்தையால் வேன் டிரைவர் முகமது இலியாஸ் கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்தையடுத்து,ஜுலை 17-ஆம் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதையடுத்து, தலமலை சாலையில் வைக்கப்பட்ட கூண்டில் ஜூலை 24-ஆம் தேதி ஆள்கொல்லி சிறுத்தை பிடிபட்டது.பின்னர், அந்த சிறுத்தை வண்டலூர் உயிரியல் காப்பகத்தில் விடப்பட்டது.
சிறுத்தை தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் கிருஷ்ணன் நினைவாக 22 கிலோமீட்டர் நீளமுள்ள திம்பம்-தலமலை வனச்சாலைக்கு கிருஷ்ணன் சாலை என வனத்துறையினர் பெயர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.இந்த பெயர் பலகை அண்மையில் திறக்கப்பட்டு திம்பம் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் நினைவாக வைக்கப்பட்ட பெயர் பலகை, என்றும் நினைவில் நிற்கக்கூடிய செயல் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தை, புலிகள் உள்ளன. சிறுத்தை நடமாட்டம் அதிகமுள்ள திம்பம் மலைப்பகுதியில் ஜுன் 11-ஆம் தேதி சிறுத்தையால் வேன் டிரைவர் முகமது இலியாஸ் கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்தையடுத்து,ஜுலை 17-ஆம் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதையடுத்து, தலமலை சாலையில் வைக்கப்பட்ட கூண்டில் ஜூலை 24-ஆம் தேதி ஆள்கொல்லி சிறுத்தை பிடிபட்டது.பின்னர், அந்த சிறுத்தை வண்டலூர் உயிரியல் காப்பகத்தில் விடப்பட்டது.
சிறுத்தை தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் கிருஷ்ணன் நினைவாக 22 கிலோமீட்டர் நீளமுள்ள திம்பம்-தலமலை வனச்சாலைக்கு கிருஷ்ணன் சாலை என வனத்துறையினர் பெயர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.இந்த பெயர் பலகை அண்மையில் திறக்கப்பட்டு திம்பம் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் நினைவாக வைக்கப்பட்ட பெயர் பலகை, என்றும் நினைவில் நிற்கக்கூடிய செயல் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment