தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 18, 2014

சத்தியமங்கலம் புத்தக திருவிழா 2014
****************************************
 சத்தியமங்கலம் வாசிக்கிறது - 1000 மாணவ மாணவியர்கள் புத்தகங்களை வாசித்தனர்

 


சத்தியமங்கலம் செப்டம்பர் 18:

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

சத்தியமங்கலத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள புத்தக திருவிழா குறித்தும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறித்தியும் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலை-துவக்க பள்ளியில் சத்தியமங்கலம் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஜோசப் சகாயராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் எம்.செல்வி, கல்வி மேலாண்மை குழு தலைவர் கே.லோகநாதன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, சி.பரமேஸ்வரன், விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசும்போது ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன். மனித மனதின் கோணலை நேர்படுத்துவது புத்தகங்கள் தான். ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். நாம் தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவுடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே புத்தகத்தின் மூலம் நாம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்.மாணவ மாணவியர்கள் பாட புத்தகங்களை படிப்பதோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஏனெனில் புத்தகங்கள் மகத்தான மனிதர்களையும், அறிஞர்களையும், கவிஞர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் 25 இகும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்கள் பங்குபெற உள்ளனர். இலட்சகணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கபடும். இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.





பின்னர் நகராட்சி உயர்நிலை மற்றும் துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒரு மணிநேரம் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள்,மாணவிகள் உள்பட 1000 இகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. மரியாதைக்குரியவரே,வணக்கம். சத்தியமங்கலம் புத்தகம் வாசிக்கிறது! நிகழ்ச்சியை தொடர்ந்து புத்தக திருவிழா சிறப்பாக நடைபெறவும்,சத்தியமங்கலம் வட்டார பொதுமக்கள் புத்தகம் என்னும் அறிவியல் பொக்கிஷத்தின் மேன்மையை உணர்ந்திடவும் தங்களது குழுமம் மற்றும் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளையின் செயல் போற்றுதலுக்குரியது...நாங்களும் பாராட்டுகிறோம்...வளரட்டும் சமூகப்பணி என...
    வாழ்த்தும் அன்பன்
    பரமேஸ்வரன்.C.
    (1)செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
    (2)செயலாளர்-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்.ஈரோடு மாவட்டம்.
    (3)தலைவர்-தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

    ReplyDelete