சத்தியமங்கலம் வாசிக்கிறது!
புன்செய் புளியம்பட்டி விடியல்
சமூகநல இயக்கம் மற்றும் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில்
முதல்முறையாக சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா - 2014 வருகின்ற அக்டோபர்
மாதம் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் அத்தாணி ரோட்டில்
அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
புத்தகம்
வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் புத்தக திருவிழா குறித்த
விழிப்புணர்வை மாணவ மாணவியரிடம் ஏற்படுத்தும் பொருட்டு வருகின்ற 17/9/2014
புதன்கிழமை காலை 9.30 மணியளவில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் சத்தியமங்கலம் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் தலைமை ஆசிரியர்,ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்
ஆசிரியர் கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விடியல் சமூகநல இயக்க
உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சுமார் 1 மணிநேரம் புத்தகங்களை
வாசிக்க உள்ளனர்.
அறிவு திருவிழாவான புத்தக திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240
அறிவு திருவிழாவான புத்தக திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240
மரியாதைக்குரியவரே,
ReplyDeleteவணக்கம். புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கத்தின் சமூகப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.
என
பரமேஸ்வரன்.C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -
தமிழ்நாடு. (http://consumerandroad.blogspot.com)