புன்செய் புளியம்பட்டியில் திரைப்பட இயக்குனர் வசந்த் அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், லோகநாதன், ரமேஷ் சந்திப்பு.
புன்செய் புளியம்பட்டிக்கு வருகை தந்த கேளடி கண்மணி, ஆசை, ரிதம், பூவெல்லாம் கேட்டுப்பார், மூன்று பேர் மூன்று காதல் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த் அவர்களை விடியல் சமூகநல இயக்குனர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினர்கள் லோகநாதன், ரமேஷ்குமார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது விடியல் சமூகநல இயக்க பணிகள் மற்றும் புத்தக திருவிழா குறித்த விபரங்களை தெரிவித்தோம். 3 ஆம் ஆண்டாக புன்செய் புளியம்பட்டியில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்தார். தான் ஒரு புத்தக ஆர்வலர் என்றும் தான் இந்த அளவு உயர்ந்தமைக்கு புத்தகங்கள் தான் காரணம் என்றார். தனது அடுத்த படம் " நடை உடை பாவனை" என்றும் நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது என்றார். அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அழைப்பு விடுத்தார். அதனை வசந்த் அவர்கள் ஏற்றுகொண்டார்.
0 comments:
Post a Comment