தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 7, 2014

ஆலை கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு: சத்தியமங்கலம் விவசாயிகள் வேதனை




சத்தியமங்கலம், நவ 7:
சத்தியமங்கலம் அருகே செண்டுமல்லி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி கிராமத்தில் சத்தி மைசூர் சாலையில் தனியார் செண்டுமல்லி ஆலை இயங்கி வருகிறது. இங்கு செண்டுமல்லி பூவிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்பட்டு நாற்றுக்கள் உருவாக்கப்படுகின்றன. பூவில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் போது ரசாயணங்களை பயன்படுத்தி அதன் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.  இந்த கழிவுநீர் அருகே உள்ள ஓடையில் கலக்கிறது.  இதனால் ஓடைநீர் கறுப்பு நிறமாக நுரை பொங்க துர்நாற்றத்துடன் ஓடுகிறது. விவசாய நிலங்களுக்கு இடையே செல்லும் ஓடைநீர் இறுதியில் அங்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் சேர்கிறது. 

ரசாயண கழிவுகளால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர்,தற்போது மழை பெய்துள்ளதால் அதன் தாக்கம் அதிகளவில் வெளியே தெரிகிறது.பெரும்பாலான  குடிநீர், விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் கழிவுநீர் கலந்து விவசாயம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தண்ணீரை குடிக்க கூடி முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

இந்த மாசுபட்ட நீரால் விவசாயப் பயிர்கள் கருகி விடுவதாகவும், நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக  சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  இது குறித்து புதுவடவள்ளி விவசாயி கிருஷ்ணராஜன் கூறியது:

புதுவடவள்ளி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கரில் மல்லிகைப்பூ மற்றும் வாழை பயிரிட்டுள்ளனர். தடுப்பணையில் செண்டுமல்லிப்பூ கழிவுநீர் மட்டுமின்றி காகித ஆலைகழிவுநீர் கலப்பதால் பயிர்கள் கருகி வருகின்றன. குடிநீர் கிடைக்காததாலும், விவசாயம் செய்ய முடியாததாலும் மக்கள் பிழைப்பு தேடி வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்கின்றனர். ஆலையை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காற்று மாசுபட்டு மக்களுக்கு அலர்ஜி மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையில் செல்லும் நீர் பவானி ஆற்றில் கலப்பதால் ஆற்று நீரும் மாசுபடுவதால்  இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment