தாளவாடி வனத்தில் திரிந்த 8 பேர் கைது: 3 பேர் விடுவிப்பு
சத்தியமங்கலம்,நவ 12:
தாளவாடி வனப்பகுதியில் பிடிப்பட்ட 11 பேரில் 3 பேர் விடுவிக்கப்பட்டபட்டனர். மற்ற 8 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் உதயராஜ் தலைமையில் வனத்துறையினர் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அபோபது, கல்மண்டிபுரம் பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த 11 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.அதில் கல்மண்டிபுரத்தைச் சேர்ந்த குமார்(27),மாதன்(30) மற்றும் மாருகுட்டி(40) ஆகியோரை விடுவித்தனர். அல்லபரத் தொட்டியைச் சேர்ந்த மா.மணிகண்டன்(18),ப.காளன்(28),
சத்தியமங்கலம்,நவ 12:
தாளவாடி வனப்பகுதியில் பிடிப்பட்ட 11 பேரில் 3 பேர் விடுவிக்கப்பட்டபட்டனர். மற்ற 8 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் உதயராஜ் தலைமையில் வனத்துறையினர் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அபோபது, கல்மண்டிபுரம் பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த 11 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.அதில் கல்மண்டிபுரத்தைச் சேர்ந்த குமார்(27),மாதன்(30) மற்றும் மாருகுட்டி(40) ஆகியோரை விடுவித்தனர். அல்லபரத் தொட்டியைச் சேர்ந்த மா.மணிகண்டன்(18),ப.காளன்(28),
ஐடையன்(50),நாகமல்லன்(28),மாதே வன்(28),மூர்த்தி(45),ஆலமலை(40)
மற்றும் கோடம்பள்ளியைச் சேர்ந்த பத்ரன்(30) ஆகியோரை கைது செய்தனர். இது
குறித்து ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் சி.ஹெச்.பத்மா
செவ்வாய்க்கிழமை கூறியது: தாளவாடி வனப்பகுதியில் சமூக விரோத செயல்களில்
ஈடுபடும் நபர்களை விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையி்ல், புலித்
தோல்,நகங்கள் மற்றும் புலிகோரைப்பல் மற்றும் தந்தம் கடத்தல் போன்ற
குற்றங்களில் தொடர்புடைய 8 பேரை கைது செய்துள்ளோம். அதே பகுதியைச் சேர்ந்த
3 பேரை விடுவித்துள்ளோம் என்றார்.
0 comments:
Post a Comment