புன்செய் புளியம்பட்டியில் முதல் முறையாக குழந்தைகள் திரைப்பட விழா - நவம்பர் 10 முதல் 16 வரை நடைபெறுகிறது.
****************************** ****************************** **********
நிறைவு விழா 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் புன்செய் புளியம்பட்டி சிந்தாமணி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. 15 ஆம் தேடி காலை 10 மணிக்கு காந்தி திரைப்படமும், மாலை 6 மணிக்கு பாரதி திரைப்படமும், 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு காமராஜர் திரைப்படமும், மாலை 6 மணிக்கு சுவாமி விவேகானந்தர் திரைப்படமும் திரையிட படுகிறது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
******************************
புன்செய் புளியம்பட்டி நவம்பர் 9:
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் குழந்தைகள்
தினத்தை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டியில் முதல்முறையாக குழந்தைகள்
திரைப்பட விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, புன்செய் புளியம்பட்டியில் முதல்முறையாக குழந்தைகள்
திரைப்பட விழா நவம்பர் 10 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்றைக்கு திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஊடகம். பேச்சு மொழியை
காட்டிலும் காட்சி மொழி எளிதில் மனதில் பதியும். அந்த வகையில்
குழந்தைகளிடம் அன்பு, அஹிம்சை, மனிதநேயம், தன்னம்பிக்கை ஊட்டும் வகையில்
ஆஸ்கார் விருது மற்றும் உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்ற
சிறந்த குழந்தைகள் திரைப்படங்களும், தமிழில் வெளியாகியுள்ள குழந்தைகளுக்கான
குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்று
வட்டாரத்தில் அமைந்துள்ள 20 இக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு
பள்ளியில் ஒரு படம் வீதம் 7 நாட்கள் படங்கள் திரையிடப்படும்.
குழந்தைகள்
திரைப்பட விழா சில்ரன்ஸ் ஆப் யெவன் (chilrens of heavan), கலர் ஆப்
பேரடைஸ் (color of paradise), ரெட் பலூன் (red balloon), தி சாங் ஆப்
ஸ்பெரோஸ் (the song of sparrows), life of pie ஆகிய ஆங்கில திரைப்படங்களும், காந்தி,
பாரதி, காமராஜர், சுவாமி விவேகானந்தர், பூங்கா, பூக்குட்டி, இப்படிக்கு
பேராண்டி, கை, பாலிபேட்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களும் திரையிட பட உள்ளன.
நிறைவு விழா 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் புன்செய் புளியம்பட்டி சிந்தாமணி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. 15 ஆம் தேடி காலை 10 மணிக்கு காந்தி திரைப்படமும், மாலை 6 மணிக்கு பாரதி திரைப்படமும், 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு காமராஜர் திரைப்படமும், மாலை 6 மணிக்கு சுவாமி விவேகானந்தர் திரைப்படமும் திரையிட படுகிறது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment