தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 15, 2014

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நிற்கும் பால் லாரி: போக்குவரத்து பாதிப்பு



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அடுத்த திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

இதில் சில அபாயகரமான வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகள் சிக்கி அடிக்கடி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 12–வது வளைவில் ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால் திடீர் போக்குவரத்து தடை ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது சரி செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு பால் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.

5–வது சுற்று பாதையின் வளைவில் அந்த லாரி திரும்பும்போது அதில் உள்ள பள்ளத்தில் அந்த லாரி சிக்கிகொண்டது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் திம்பம் மலைப்பாதை ரோடு மிகவும் சிதிலம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.

இதனால் மலை மேலே இருந்து கீழே வரும் வாகனங்களும் கீழே இருந்து மலை மீது ஏறும் மற்ற லாரிகள், பஸ் மற்றும் இதர வாகனங்களும் தொடர்ந்து செல்ல முடியாமல் நிற்கிறது. போக்குவரத்து ஸ்தம்பித்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பஸ் மற்றும் கார் வேன்களில் உள்ள பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் மற்றும் மீட்பு குழுவினரும் விரைந்து உள்ளனர்.

0 comments:

Post a Comment