சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.1800
சத்தியமங்கலம், நவ. 11–
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், புதுக்குய்யனூர், புதுவடவள்ளி, பவானிசாகர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் போன்ற பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் பூக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் மலர் உற்பத்தியாளர் சங்க மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மாநகரங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
மேலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சத்தியமங்கலம் மல்லிகைப் பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. தற்போது முகூர்த்த சீசன் தொடங்கி உள்ளதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
முன்பு ரூ.500–க்கு விலை போன ஒரு கிலோ மல்லிகைப்பூ சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ரூ.1800–க்கு விற்கப்பட்டது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000–க்கும், சம்பங்கி ரூ.200–க்கும், காக்கடா ரூ.1250–க்கும், செண்டு மல்லி ரூ.40–க்கும், பட்டுப்பூ ரூ.50க்கும் விற்பனை ஆனது.
சத்தியமங்கலம் பகுதியில் தற்போது கடும்பனிப் பொழிவு உள்ளது. இதனால் மல்லிகை செடியில் உள்ள அரும்புகள் சிறுத்து பூக்கள் உற்பத்தி குறைந்துவிட்டது. இந்த நேரத்தில் தேவையும் அதிகரித்து விட்டதால் பூக்களின் விலை உயர்ந்து விட்டதாக உற்பத்தியாளர் தலைமை சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொவித்தனர்.
சத்தியமங்கலம், நவ. 11–
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், புதுக்குய்யனூர், புதுவடவள்ளி, பவானிசாகர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் போன்ற பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் பூக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் மலர் உற்பத்தியாளர் சங்க மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மாநகரங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
மேலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சத்தியமங்கலம் மல்லிகைப் பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. தற்போது முகூர்த்த சீசன் தொடங்கி உள்ளதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
முன்பு ரூ.500–க்கு விலை போன ஒரு கிலோ மல்லிகைப்பூ சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ரூ.1800–க்கு விற்கப்பட்டது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000–க்கும், சம்பங்கி ரூ.200–க்கும், காக்கடா ரூ.1250–க்கும், செண்டு மல்லி ரூ.40–க்கும், பட்டுப்பூ ரூ.50க்கும் விற்பனை ஆனது.
சத்தியமங்கலம் பகுதியில் தற்போது கடும்பனிப் பொழிவு உள்ளது. இதனால் மல்லிகை செடியில் உள்ள அரும்புகள் சிறுத்து பூக்கள் உற்பத்தி குறைந்துவிட்டது. இந்த நேரத்தில் தேவையும் அதிகரித்து விட்டதால் பூக்களின் விலை உயர்ந்து விட்டதாக உற்பத்தியாளர் தலைமை சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொவித்தனர்.
0 comments:
Post a Comment