தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 11, 2014

பு.புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு


பு.புளியம்பட்டி, நவ.11–
புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக பஸ் நிலைய கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகளை ஆய்வு செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் புளியம்பட்டி பகுதிக்கு சென்றார். பின்னர் பஸ் நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஒரு மாத காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் பஸ் நிலைய பகுதியில் கோழி கழிவுகள் கொட்டி கிடக்கின்றன. அவ்வாறு கோழி கழிவுகளை கொட்டும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

பு.புளியம்பட்டி பகுதியில் நகராட்சி திருமண மண்டபத்தை சீரமைத்தல், சாக்கடைகள் சுத்தம் செய்தல், குடிநீர் வினியோகம் போன்ற பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் செந்தில்வேல், நில வருவாய் ஆய்வாளர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், பொறியாளர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

0 comments:

Post a Comment