தாளவாடியில் 8 பேர் கைதுக்கு பவானிசாகர் எம்எல்ஏ கண்டனம்
சத்தியமங்கலம்,நவ 11:
தாளவாடி வனப்பகுதியில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட 11 பேரை விடுக்கவேண்டும் என்றும் அவர்களை தாக்கி வனஊழியர்கள் மீது வனகொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பவானிசாகர் எம்எல்ஏ, பி.எல்.சுந்தரம் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவின் விபரம்:
சத்தியமங்கலம் வட்டம்,தாளவாடி வனச்க்கிராமத்தைச் சேர்ந் 11 பேரை தாளவாடி வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.பின்னர் அதில் 3 பேரை மட்டுமே விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட மூவரில் சோளகர்தொட்டியைச் சேர்ந்த குமார் என்பவரை சிக்கள்ளி வனச்சரகத்தில வைத்து தாக்கியுள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட குமார், சத்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பழங்குடியினர் வனக்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை விசாரிப்பதும் குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களை சட்டப்படி தண்டணைக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்திலும் தவறில்லை. அதேசமயம், அப்பாவி மலைவாழ் மக்கள் என்பதற்காக விசாரணை என்கின்ற பெயரிலேயே அவர்களை கடுமையான சித்தரவதைக்கு ஆளாக்குவதும், சட்டநியாங்களுக்கு புறம்பாக அவர்களை அடைத்து வைப்பதும் மனித உரிமைக்கு எதிரானது. எனவே, வன அலுவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைதடுப்பு சட்டப்படி வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம்,நவ 11:
தாளவாடி வனப்பகுதியில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட 11 பேரை விடுக்கவேண்டும் என்றும் அவர்களை தாக்கி வனஊழியர்கள் மீது வனகொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பவானிசாகர் எம்எல்ஏ, பி.எல்.சுந்தரம் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவின் விபரம்:
சத்தியமங்கலம் வட்டம்,தாளவாடி வனச்க்கிராமத்தைச் சேர்ந் 11 பேரை தாளவாடி வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.பின்னர் அதில் 3 பேரை மட்டுமே விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட மூவரில் சோளகர்தொட்டியைச் சேர்ந்த குமார் என்பவரை சிக்கள்ளி வனச்சரகத்தில வைத்து தாக்கியுள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட குமார், சத்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பழங்குடியினர் வனக்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை விசாரிப்பதும் குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களை சட்டப்படி தண்டணைக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்திலும் தவறில்லை. அதேசமயம், அப்பாவி மலைவாழ் மக்கள் என்பதற்காக விசாரணை என்கின்ற பெயரிலேயே அவர்களை கடுமையான சித்தரவதைக்கு ஆளாக்குவதும், சட்டநியாங்களுக்கு புறம்பாக அவர்களை அடைத்து வைப்பதும் மனித உரிமைக்கு எதிரானது. எனவே, வன அலுவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைதடுப்பு சட்டப்படி வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment