புன்செய்
புளியம்பட்டியை அடுத்துள்ள செல்லப்பம்பாளையத்தில் மிகவும் குறுகலான பாலம்
உள்ளது. இங்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி அமைந்து உள்ளது. பாலம்
குறுகலாக இருந்ததால் இங்கு அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும்
நிகழ்ந்த வண்ணம் இருந்தது. புதிய பாலம் கட்டவேண்டும் என பொதுமக்களும், மாணவ
மாணவியர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து
தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் சுமார் 1 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில்
புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பாலம் கட்டும் பணி முடியும் என
பொதுபணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு
விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் விபத்துகள் குறையும் எனவும் பாலம் கட்ட
நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் நன்றி
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment