தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, November 12, 2014

சாக்கடை நீர் புகுவதை தடுக்கக்கோரி ஆலத்துக்கோம்பை கிராமமக்கள் சாலை மறியல்



சத்தியமங்கலம்,நவ 13:
கிராமத்துக்கு சாக்கடை நீர் புகுவதை தடுக்ககோரி ஆலத்துக்கோம்பை கிராமமக்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை அண்ணாநகரில் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தை ஒட்டி பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான விவசாய பண்ணையும், பணியாளர் குடியிருப்பும் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பண்ணையிலிருந்து வெளியேறும் மழைநீரும் பணியாளர் குடியிருப்பு சாக்கடைநீரும் கலந்து அண்ணாநகர் கிராமத்துக்குள் புகுந்து வீட்டு சுவர்களை ஒட்டியவாறு செல்வதால் சுவர்களில் ஈரப்பதம் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து கிராமமக்கள் சர்க்கலை ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். சாக்கடை நீரை மாற்று பகுதியில் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சதுமுகை ஊராட்சி வார்டு உறுப்பினர் பழனிச்சாமி தலைமையில் 50 -கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் - கொடிவேரி சாலையில் அமர்ந்து புதன்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பவானிசாகர் எம்எல்ஏ, பி.எல்.சுந்தரம் கிராம மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

0 comments:

Post a Comment