தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 25, 2014

வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க தீவிர ரோந்து பணி: ஐ.ஜி. சங்கர் பேட்டி


ஈரோடு, நவ.23–
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டலத்துக்குட்பட்ட ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த ஆண்டை விட குற்றங்கள் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு 8 மாவட்டத்திலும் 290 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டு 260 வழக்குகள் தான் பதிவாகி உள்ளது. சங்கிலி (நகை) பறிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு 211 பதிவானது. இந்த ஆண்டு 144 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
வழக்குகளை விரைவில் முடிப்பதிலும் குற்றங்களை தடுப்பதிலும் அனைத்து மாவட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஈரோடு , நீலகிரி மாவட்ட மற்றும் மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கிடையாது. இம்மாவட்ட மலைப்பகுதிகளில் அதிரடி படை வீரர்களுடன் போலீசாரும் இணைந்து ரோந்து சுற்றி தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளில் எந்த பதட்டமும், தீவிரவாதிகளின் நடமாட்டமும் இல்லை. இவ்வாறு ஐ.ஜி.சங்கர் கூறினார்.

0 comments:

Post a Comment