திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது. நாலரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பயணிகள் கடுங்குளிரில் அவதி.
சத்தியமங்கலம், நவ.17 . அடுத்த திம்பம் மலைப்பாதையில் லாரி குழியில்
இறங்கியதால் தமிழகம் & கர்நாடக மாநிலத்திற்கிடையே நாலரைமணி நேரம்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் & மைசூர் சாலையில்
பண்ணாரியை அடுத்து அடர்ந்த வனப்பகுதியில் 27 அபாயகரமான கொண்டை
ஊசிவளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இம்மலைப்பாதை வழியாக 24
மணி நேரமும் சரக்கு வாகனங்கள் மற்றும் இருமாநில பேருந்து
போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது பெய்த மழை காரணமாக
கொண்டைஊசிவளைவுகளில் சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளதால் லாரியின் சக்கரங்கள்
குழியில் சிக்கி நகரமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நேற்று
அதிகாலை 5 மணியளவில் மைசூரிலிருந்து பருத்திப்பஞ்சு பாரம் ஏற்றிய லாரி
கோவை செல்வதற்காக செல்வதற்காக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. 15 வது
கொண்டை ஊசிவளைவில் லாரி திரும்பியபோது லாரியின் பின்சக்கரம் குழியில்
சாலையில் உள்ள சிக்கி லாரி நகரமுடியாமல் நின்றது. இதனால் வாகனங்கள்
செல்லமுடியாமல் மலைப்பாதையின் இருபுறமும் வரிசையில் நின்றன. இதுகுறித்து
தகவலறிந்த சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த
போக்குவரத்தை சீர்படுத்தும பணியில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் லாரி
கிரேன் முலம் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது. பேருந்தில் பயணம் செய்த
பயணிகள் கடுங்குளிரில் அவதிப்பட்டனர். மலைப்பாதையில் 3, 6, 12, 15, 20
மற்றும் 24 ம் கொண்டை ஊசிவளைவுகளில் உள்ள குழிகளை மூட தேசிய
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment