தொடர் மழையால் கடம்பூர் மலைப்பகுதியில் உருவான புதிய அருவிகள்
சத்தியமங்கலம், நவ 14: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில்
தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக புதிய அருவிகள் உருவாகியுள்ளன.இந்த
அருவிகள் பெரும்பள்ளம் அணையில் கலப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து
உள்ளது.
சில வாரங்களாக சத்தி புலிகள் காப்பகத்தில் கனமழை பெய்து
வருவாதல் பெரும்பாலான குளம், குட்டைகள் நிரம்பிவிட்டன. மலைக்கிராமங்களில்
நிலத்தடிநீர் உயர்ந்தும் நிலத்தில் ஈரப்பதம் பிடித்துள்ளதால் தொடர்ச்சியாக
பெய்யும் மழைநீர் நிலத்தில் தேங்கி
நிற்காமல் ஓடைகளில் வழிந்தோடுகின்றன. கடம்பூர்,மல்லியம்மன் துர்க்கம்,
குன்றி, மாக்கம்பாளையம், அருகியம், கூத்தம்பாளையம், இருட்டிபாளையம்
உள்ளிட்ட வனக்கிராமங்களில் சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து
வருகிறது. மழையின் காரணமாக காய்ந்து கிடந்த வனப்பகுதி பச்சைப்பசேலென
மாறியது.
சிற்றோடைகள்
மற்றும் பள்ளங்களில் ஓடும் நீர் பாறைகளின் வழியாக 10-க்கும் மேற்பட்ட
இடங்களில் அருவியாக கொட்டுகிறது. கே.என்.பாளையத்திலிருந்து கடம்பூர்
செல்லும் மலைப்பாதையில் இந்த அருவிகள் தோன்றியுள்ளதால் மலைப்பாதையில்
பயணிப்பவர்கள் அருவிகளில் வழியும் வெண்நுரை அருவிநீரை நின்று ரசித்தபடி
செல்கின்றனர். அருவியில் கொட்டும் நீர் ஐஸ் போல் குளிர்ந்துள்ளது
மட்டுமின்றி வனப்பகுதியிலிருந்து மூலிகைகள் கலந்து வருவதால் குற்றாலத்தில்
உள்ள நீருக்கு இணையானது என மலைகிராம மக்கள் கூறுகின்றனர்.
இலைகள் உதிர்ந்து வறண்டு சருகாக காணப்பட்ட வனப்பகுதியானது தற்போது எங்கு பார்த்தாலும் பச்சைகம்பளம் போர்த்தியபடி மரங்கள் தெரிகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டதால் மானாவாரியாக கிடந்த நிலங்களில் உழவு பணி நடந்து வருகிறது. கசிவுநீர்க்குட்டைகள், தடப்பணைகள் நிரம்பிவிட்டதால் வனவிலங்குகள் அந்தந்த குட்டைகளில் நீர் அருந்துவதாலும் யானைகள் நடமாட்டம் குறைந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இலைகள் உதிர்ந்து வறண்டு சருகாக காணப்பட்ட வனப்பகுதியானது தற்போது எங்கு பார்த்தாலும் பச்சைகம்பளம் போர்த்தியபடி மரங்கள் தெரிகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டதால் மானாவாரியாக கிடந்த நிலங்களில் உழவு பணி நடந்து வருகிறது. கசிவுநீர்க்குட்டைகள், தடப்பணைகள் நிரம்பிவிட்டதால் வனவிலங்குகள் அந்தந்த குட்டைகளில் நீர் அருந்துவதாலும் யானைகள் நடமாட்டம் குறைந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment