தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 7, 2014

தாளவாடி:விஷம் வைத்து புலியை கொன்ற வழக்கில் இருவர் கைது

 

 
சத்தியமங்கலம்,நவ 7:
தாளவாடி அருகே தண்ணீர் குடிக்க வந்த புலிக்கு விஷம் வைத்து கொன்ற வழக்கில் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் மற்றும் தாளவாடி வனத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வரும் புள்ளி மான், யானை, புலி போன்ற வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று அதன் இறைச்சி மற்றும் தந்தங்களை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து,  குற்றவாளிகளை பிடிக்க ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குர் பி.ஹெச். பத்மா, தாளவாடி வனச்சரக அலுவலர் உதயராஜ் மற்றும் வனப்பாதுகாப்பு படையினர் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

தாளவாடி வனத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிவிட்டு கர்நாடகத்துக்கு தப்பியோடும் மர்மநபர்கள் பற்றி வனத்துறையினர் தகவல் சேகரித்தனர். இந்நிலையில், தமிழக-கர்நாடக எல்லையான தாளவாடி கும்பாரகுண்டி என்ற இடத்தில் வனத்துறையினர் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து அங்கு சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்துபோது மூக்கன்பாளையத்தைச் சேர்ந்த 
குமாரநாயக்(35) என்பதும் இவர் மீது பல்வேறு வனக்குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. குமாரநாயக் அளித்த தகவலின்பேரில் அதே ஊரைச் சேர்ந்த பொம்மன்(40) என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் எட்டேகவுண்டர்தொட்டி மற்றும் மூக்கம்பாளையம் வனத்தில் உள்ள நீர் நிலைகளில் யூரியாவுடன்  விஷத்தன்மையுள்ள பொருள்களை கலந்து விடுவதும் அதனை குடித்ததும் உயிரிழக்கும் புள்ளிமான் இறைச்சிகளை விற்பதும் யானைகளின் தந்தங்கள் மற்றும் புலி நகங்கள், தோல்களை கடத்துவதும்  போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தாளவாடி அருகே புலிக்கு விஷம் வைத்து கொன்று அதன் நகங்கள்,தோலை கர்நாடகத்து கடத்தியதாக இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பிடிப்பட இருவர் மீதும் வனவிலங்குகளை வேட்டையாடியது, சந்தன மரம் மற்றும் யானை தந்தம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தமிழகம் மற்றும் கர்நாடக நீதிமன்றத்தில் உள்ளது தெரியவந்தது. நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்த இருவரையும் தாளவாடி வனத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

0 comments:

Post a Comment