பனையம்பள்ளி தரைபாலம் கட்டும் பணியினை விரைந்து முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்
புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 22: புன்செய் புளியம்பட்டி அடுத்து
அமைந்துள்ளது பனையம்பள்ளி கிராமம். இங்கிருந்து மல்லியம்பட்டி செல்லும்
சாலையில் புதிய தரைப்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று
வருகிறது. பாலம் கட்டும் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள்
மிகந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். மழை காலங்களில் தண்ணீர் தேங்கி
போக்குவரத்து பாதிக்கபடுகிறது. எனவே தரைப்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து
முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், ஊர் பொதுமக்களும் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment