சத்தியமங்கலம்
தலமலை வனப்பகுதியில் குட்டியுடன் நடமாடும் புலி.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தலமலை வனப்பகுதியில் குட்டியுடன் நடமாடும் புலி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. |
சத்தியமங்கலம், ஆக.17. சத்தியமங்கலம்
புலிகள் காப்பகத்தில் உள்ள தலமலை வனப்பகுதியில் புலி குட்டியுடன் நடமாடுவது
கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில்
புலிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை நிலவுவதால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக
அதிகாித்துள்ளது. குறிப்பாக தலமலை வனச்சரகத்தில் ராமரணை, பெஜலட்டி,
மாவநத்தம், இட்டரை, தடசலட்டி வனப்பகுதியிலும், பவானிசாகா் வனச்சரகத்தில்
கொத்தமங்கலம், புதுபீா்கடவு, கருவண்ணராயா் கோயில் மற்றும் மாயாற்றின்
கரையோர வனப்பகுதியிலும் புலிகள் வாழ்வதற்கேற்ற அடா்வனப்பகுதி இயற்கையாக
அமைந்துள்ளதால் இப்பகுதியில் புலிகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது.
புலிகளின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கம் குறித்து அறிய உலகளாவிய
இயற்கைக்கான நிதிநிறுவனம் (புலிகள் திட்டம்) வனத்துறையுடன் இணைந்து புலிகள்
நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து
வருகிறது. இதில் சமீபத்தில் தலமலை வனப்பகுதியில் இரவு நேரத்தில் புலி
குட்டியுடன் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதன் முலம் புலிகள் எண்ணிக்கை
அதிகாித்திருப்பத உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை
அதிகாாிகள் கூறியதாவது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை
அதிகாித்தததால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த
2013 ம் ஆண்டில் சத்தியமங்கலம் வன உயிாின சரணாலயத்தை புலிகள் காப்பகமாக
அறிவித்தது. இதையடுத்து புலிகள் காப்பகத்திற்கான நடைமுறை செயல்பாடுகள்
வனப்பகுதியில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. புலிகள் காப்பகம் ஆனதால்
வனக்கோட்டம் இரண்டாக பிாிக்கப்பட்டு இரண்டு வனச்சரகங்கள் கூடுதலாக
உருவாக்கப்பட்டது. மத்திய புலிகள் காப்பக ஆணையம் நிதி ஒதுக்கியுள்ளதால்
வனத்துறைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு
வருகின்றன என்று கூறினா்.
0 comments:
Post a Comment