நெடுஞ்சாலைகளில் செயல்படும் பள்ளிகள் அருகே வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். - விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள்
புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 26:
சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி மற்றும்
அருகிலுள்ள பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் முன்பு வேகத்தடை மற்றும்
எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என விடியல் சமூகநல இயக்க செயலாளர்
எஸ்.ஜெயகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்
கூறியுள்ளதாவது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி அமைந்து உள்ளது. இங்கு சத்தியமங்கலம் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இதில் சுமார் 300 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் பாதையை கடக்க மிகவும் சிரமபடுகின்றனர். நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாணவன் ஒருவனின் கால் சிதைந்து விட்டது. அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடப்பது வாடிக்கையாகி விட்டது. நெடுஞ்சாலைகளில் சீறிபாயும் வாகனங்களால் பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் உரிய வேக தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும், மேலும் பள்ளி பகுதி- மித வேகம் என எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும். இதேபோல் நீலிபாளையம், செல்லப்பம்பாளையம், விண்ணப்பள்ளி அருகே அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் துவக்க பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே புன்செய் புளியம்பட்டி மற்றும் மேற்கண்ட ஊர்களில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்த பட்ட அதிகாரிகள், போக்குவரத்து துறையினர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி அமைந்து உள்ளது. இங்கு சத்தியமங்கலம் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இதில் சுமார் 300 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் பாதையை கடக்க மிகவும் சிரமபடுகின்றனர். நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாணவன் ஒருவனின் கால் சிதைந்து விட்டது. அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடப்பது வாடிக்கையாகி விட்டது. நெடுஞ்சாலைகளில் சீறிபாயும் வாகனங்களால் பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் உரிய வேக தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும், மேலும் பள்ளி பகுதி- மித வேகம் என எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும். இதேபோல் நீலிபாளையம், செல்லப்பம்பாளையம், விண்ணப்பள்ளி அருகே அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் துவக்க பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே புன்செய் புளியம்பட்டி மற்றும் மேற்கண்ட ஊர்களில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்த பட்ட அதிகாரிகள், போக்குவரத்து துறையினர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment