தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 31, 2015

பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மத நல்லிணக்க நாள் விழா

 

புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 20: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மத
நல்லிணக்க நாளாக கடைபிடிக்க படுகிறது. இதை முன்னிட்டு புன்செய்
புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவமாணவியர்கள் நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் எடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்து கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கீதா, மேரி திவ்யா உள்பட 120
இக்கும் மேற்பட்ட மாணவமாணவியர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment