சிறுத்தை அச்சுறுத்தல்: இரவுநேர காவலுக்கு விவசாயிகள் செல்ல தடை
சத்தியமங்கலம்,ஆக 29:
தாளவாடி
தொட்டகாஹசனூர் தோட்டத்துச் சாலை பகுதியில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக
இரவு நேர காவலுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது.
ஆசனூர் வனச்சரகம் தாளவாடி
அடுத்துள்ள தொட்டகாஹசனூர் பகுதியில் கடந்த இரு வாரங்களாக சிறுத்தை
உலாவுவதால் கிராமமக்கள் விவசாயத் தோட்டத்துக்கு செல்ல முடியமால்
தவிக்கின்றனர்.மேலும், வனத்தையொட்டியுள்ள கிராமத்துக்குள் சிறுத்தை
புகுந்து கிராமமக்களை அச்சுறுத்தியதால் அதனை பிடிக்குமாறு வனத்துறையினரிடம்
விவசாயிகள் முறையிட்டனர்.
இதையடுத்து, ஆசனூர் புலிகள் காப்பக
இணை இயக்குநர் சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர் உதயராஜ் மற்றும்
வனத்துறையினர் ஆகியோர் சனிக்கிழமை சம்பவயிடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதைத்
தொடர்ந்து கிராமவாசிகளிடம் ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர்
சி.ஹெச்.பத்மா கூறியது: கிராமத்தையொட்டி நீரோடை செல்வதாலும் முட்புதர்கள்
அடங்கிய அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும் இந்த பெண் சிறுத்தை குட்டி
போட்டுயிருக்கலாம். குட்டி வளர 45 நாள்களாகும். அதுவரை குட்டியை பாதுகாக்க
இந்த பகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். இதையடுத்து சிறுத்தையின்
வழித்தடத்தை ஆய்வு செய்து வருகிறோம்.வன ஓடை, உயரமாக மரம் போன்ற இடங்களில்
கேமரா வைத்து அதன் நடமாட்டத்தை உறுதி செய்தபிறகு கூண்டு வைக்கப்படும்.
அதுவரை கிராமமக்கள் சில நாள்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும்
என்றார்.
0 comments:
Post a Comment