தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 31, 2015

புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா 



புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 31:
புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் தாமோதரன், நஞ்சப்பன், அருள்ராஜ் மற்றும் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ் ஆசிரியர் சிவகுமார் வரவேற்றார். ஆசிரியர் ஜெகநாதன் தமிழ்த்துறை குறித்து எடுத்துரைத்தார். கோவை பேராசிரியர் சூரியநாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் நடன போட்டிகள்,. இலக்கிய மன்ற பேச்சு போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பேராசிரியர் சூரியநாராயணன், தலைமை ஆசிரியர் சித்ரா, விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் பரிசு வழங்கி பாரட்டினார்கள்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான ஆசிரியர்களும், மாணவிகளும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கெ.ஒ.ம அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தமிழ் துறையினர் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment