தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 1, 2015

புன்செய் புளியம்பட்டியில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம்






அணுவிஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புஞ்சைபுளியம்பட்டியில் அனைத்துக்கட்சியினர், சமுகநல அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக சென்று உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 11 மணிக்கு பவானிசாகர் சாலையில் உள்ள எஸ்ஆர்டி தியேட்டர் அருகே திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக கட்சியினர், சமுக நல அமைப்புகள், அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என 1500 க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக புறப்பட்டு பஸ்நிலையத்தை வந்தடைந்தனர். பஸ்நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கம், புகைப்படக்கலைஞர்கள் சங்கம், வாடகை வேன், கார் ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அப்துல்கலாமின் மறைவையொட்டி நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் வாடகை வேன், கார்கள் ஓடவில்லை.

0 comments:

Post a Comment