ஆடிப்பெருக்கு தினத்தன்று (3ம் தேதி) பவானிசாகர் அணை மீது, பொதுமக்கள் சென்று பார்வையிட, பொதுப்பணித் துறையினர் அனுமதி
சத்தியமங்கலம்:ஆடிப்பெருக்கு தினத்தன்று (3ம் தேதி) பவானிசாகர் அணை மீது, பொதுமக்கள் சென்று பார்வையிட, பொதுப்பணித் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் மேல்பகுதியில், பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி, 18ம் தேதி (ஆடிப்பெருக்கு) ஒரு நாள் மட்டும், பொதுமக்கள், பவானிசாகர் அணை மீது ஏறி சென்று, நீர் தேக்கத்தை பார்த்து ரசிக்கலாம்.
சத்தியமங்கலம்:ஆடிப்பெருக்கு தினத்தன்று (3ம் தேதி) பவானிசாகர் அணை மீது, பொதுமக்கள் சென்று பார்வையிட, பொதுப்பணித் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் மேல்பகுதியில், பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி, 18ம் தேதி (ஆடிப்பெருக்கு) ஒரு நாள் மட்டும், பொதுமக்கள், பவானிசாகர் அணை மீது ஏறி சென்று, நீர் தேக்கத்தை பார்த்து ரசிக்கலாம்.
இது குறித்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடராஜன் விடுத்துள்ள
அறிக்கையில் கூறியதாவது:ஆடிப்பெருக்கு தினத்தன்று, பொதுமக்கள் அணை முன்
உள்ள பூங்காவின் வழியில், நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு, பவானி அம்மன்
கோவில் வழியாக படி ஏறி, அணை மீது செல்லலாம்.
மேலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் போலீஸ் குடியிருப்பு அருகில் உள்ள வழியிலும், நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு, அணை மீது செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மட்டும், டூவீலர்கள் அணை மீது சென்று, அங்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும்.நான்கு சக்கர வாகனங்களில், கட்டாயமாக அணை மீது செல்ல அனுமதி இல்லை. அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்திக் கொள்ளவும். அணையில் நீர்மட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பத்திரமாக அணை மீது சென்று வர வேண்டும், என்றார்.
மேலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் போலீஸ் குடியிருப்பு அருகில் உள்ள வழியிலும், நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு, அணை மீது செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மட்டும், டூவீலர்கள் அணை மீது சென்று, அங்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும்.நான்கு சக்கர வாகனங்களில், கட்டாயமாக அணை மீது செல்ல அனுமதி இல்லை. அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்திக் கொள்ளவும். அணையில் நீர்மட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பத்திரமாக அணை மீது சென்று வர வேண்டும், என்றார்.
0 comments:
Post a Comment