தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 17, 2015

புன்செய் புளியம்பட்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

 
 
புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 14: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 23-08-2015 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற உள்ளது.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, பள்ளி மாணவ மாணவியர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 23-08-2015 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்கள் பங்கு கொள்ளலாம். நுழைவு கட்டணம் ரூபாய்100. ஆண், மற்றும் பெண்களுக்கு தனித்தனி போட்டிகள் நடைபெறும். ஒரு பள்ளியில் இருந்து எதனை மாணவ மாணவியர்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். செஸ் போட்டிகள் 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது என நான்கு பிரிவுகளாக நடத்தபடுகிறது. ஓவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். போட்டி நாளன்றே மாலை 3 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். செஸ் போர்டு வைத்திருக்கும் மாணவ மாணவியர்கள் போட்டிக்கு செஸ் போர்டை கொண்டு வரவும். மாணவ மாணவியர்கள் மதிய உணவு கொண்டு வரவேண்டும். போட்டியில் பங்கு பெரும் மாணவ மாணவியர்கள் தங்கள் பெயர் மற்றும் நுழைவு கட்டணத்தை 21-08-2015 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விடியல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விடியல் அலுவலகம், மாதம்பாளையம் ரோடு, புன்செய் புளியம்பட்டி என்ற முகவரியில் நேரிலோ 98427 80240 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment