2 வது வாரமாக தொடரும் மாட்டு வியாபாரிகள் ஸ்டிரைக். புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச்சந்தை வெறிச்சோடியது.
புஞ்சைபுளியம்பட்டி, ஜூலை.30. மாட்டுவியாபாரிகள் ஸ்டிரைக் எதிரொலியால் 2
வது வாரமாக புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச்சந்தை மாடுகள் வரத்தின்றி
வெறிச்சோடியது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வாரந்தோறும் புதன்
மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
தமி£கத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக
இரண்டாவது பெரிய சந்தை புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையாகும். இச்சந்தைக்கு
ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கிளிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடக
மாநிலத்திலிருந்தும் கறவைமாடு, எருதுகள், அடிமாடுகள், கன்றுக்குட்டிகள்,
எருமை உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கோவை, ஊட்டி,
கேரள மாநிலத்திலிருந்து வியாபாரிகள் மாடுகளை விலைபேசி வாங்கி லாரியில்
ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.ம். இந்நிலையில் மாட்டுச்சந்தையில் மாடுகள்
வாங்கி செல்லும்போது போலீசார் வாகனங்களை பிடித்து மாடுகளை அளவுக்கதிகமாக
ஏற்றி வந்ததாக கூறி மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்பி வைப்பதன்
காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதால் மாட்டுவியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து
கடந்த 19 ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதன்
காரணமாக 2 வது வாரமாக நேற்று புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச்சந்தை வெறிச்சோடி
காணப்பட்டது. இதனால் ரு.50 இலட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக
மாட்டுவியாபாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment