புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். - பொதுமக்கள் வேண்டுகோள்
புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 24 :
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி அமைந்து உள்ளது. பேரூராட்சியாக இருந்த புன்செய் புளியம்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தபட்டுள்ளது. இவ்வூ
புன்செய்
புளியம்பட்டியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்
கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்
காணொளி கண்காட்சி மூலம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
அதேபோல் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், பாலுட்டும்
தாய்மார்கள் அறை ஆகியவை அமைந்து உள்ளன.
இங்கு
நாள்தோறும் 500 இக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பள்ளி
கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும்
பேருந்து நிலையம் வருகின்றனர். அவர்கள் அமர இருக்கை மற்றும் குடிநீர்
வசதிகள் இங்கு இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் வயதானவர்கள், பெண்கள்
மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். காலை மற்றும் மதியம் வரை கொளுத்தும்
வெய்யிலில் மக்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் அமர
நிழல்குடை, இருக்கைகள்,. குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தரவேண்டும் என பயணிகளும், ஊர் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment