சத்தியமங்கலம்
அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் ஆடல்,பாடலுடன் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்
சத்தியமங்கலம்,ஆக 17:
சத்தியமங்கலம்
அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் நாடக குழுவினரின் ஆடல்,பாடலுடன்
திங்கள்கிழமை பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கெம்பநாயக்கன்பாளையம்
பேரூராட்சி பகுதி மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கும்
விதமாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி, வீடு வீடாக பிளாஸ்டிக்
ஒழிப்பு பிரசாரம், கடைகளில் பிளாஸ்டிக் பை இல்லை என்ற வாசகம் அடங்கிய
விளம்பரம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நாடகம் மூலம் மக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் பேரூராட்சித் தலைவர் கே.சுப்பிரமணியம்
தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.துணைத்தலைவர் டி.வெங்கடசாலம்,
பேரூராட்சி செயல்அலுவலர் வீ.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சியில்
வாரச்சந்தையில் நடைபெற்ற சென்னை ஜெயபால் நாடக குழுவினரின் ஆடல்,பாடல்
நிகழ்ச்சியில் நடிகர்கள் பங்கேற்ரு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் துணிப்பை
பயன்படுத்தி அதனை தூக்கி வீச வேண்டும் எனவும் நாடகம் மூலம்
காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேரூராட்சியில் கடைகளில் ஆய்வு
செய்யப்பட்டு, விற்பனைக்கு தகுதியில்லாத பிளாஸ்டிக் கப், கவர் மற்றும்
குடிநீர் பாக்கெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 6 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம்
அபராதம் விதிக்கப்பட்டது.
கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில்
திங்கள்கிழமை நாடகம் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரம்
மேற்கொள்ளும் சென்னை ஜெயபால் நாடக குழுவினருடன் பேரூராட்சித் தலைவர்
கே.சுப்பிரமணியம், செயல்அலுவலர் வீ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்
0 comments:
Post a Comment