விபத்து பகுதியாகும் புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம்!
புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 29:
புன்செய் புளியம்பட்டியில் ரூபாய் 2 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் நுழைவாயில் அமைக்க பட்டுள்ளது. தேனு சில்க்ஸ் கடைஅருகே சத்தியில் இருந்து வரும் பேருந்துகளும், கோவை மற்றும் திருப்பூர் உள்பட பிற ஊர்களில் இருந்து வரும் பேருந்துகளும் உள்ளே நுழைகின்றன. மிக வேகமாக வந்து திரும்பும் பேருந்துகளால் இங்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த பகுதி அருகே எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கபடாததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது குறித்தும், பேருந்துகள் திரும்புவது குறித்தும் அறிவிப்பு பலகை வைத்தால் மற்ற வாகனங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் விபத்துகளும் , உயிரிழப்புகளும் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊர் பொதுமக்களும், விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புன்செய் புளியம்பட்டியில் ரூபாய் 2 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் நுழைவாயில் அமைக்க பட்டுள்ளது. தேனு சில்க்ஸ் கடைஅருகே சத்தியில் இருந்து வரும் பேருந்துகளும், கோவை மற்றும் திருப்பூர் உள்பட பிற ஊர்களில் இருந்து வரும் பேருந்துகளும் உள்ளே நுழைகின்றன. மிக வேகமாக வந்து திரும்பும் பேருந்துகளால் இங்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த பகுதி அருகே எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கபடாததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது குறித்தும், பேருந்துகள் திரும்புவது குறித்தும் அறிவிப்பு பலகை வைத்தால் மற்ற வாகனங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் விபத்துகளும் , உயிரிழப்புகளும் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊர் பொதுமக்களும், விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment