தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 1, 2014

தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்பதை உணர்த்தியவர் நா.மகாலிங்கம்: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
 




சத்தியமங்கலம்,டிச 1:தனிமனிதன் தன்னை உயர்த்திக்கொண்டு, சுற்றியுள்ள சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்பது மறைந்த நா.மகாலிங்கத்தின் எண்ணம் என சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்ற அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷண்ராஜ் தெரிவி்த்தார்.

மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் நா.மகாலிங்கத்துக்கு நினைவஞ்சலிக் கூட்டம் சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த  இக்கூட்டத்திற்கு பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினார்.

 கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ், நா.மகாலிங்கம் உடனான நினைவு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியது: தன்னையும் உயர்த்திக்கொண்டு சுற்றிவாழும் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நா.மகாலிங்கம். வந்தோம், வாழ்ந்தோம்,சென்றோம் என்றில்லாமல் துணிச்சல், சரித்திரம், வாழ்க்கையில் வெற்றி என்பது நிரூபித்து காட்டியவர்.அவரது சமூகப்பணி  நேற்றைய தலைமுறைக்கும் மட்டுமே தெரியும். இதனை இன்றைய தலைமுறையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கரும்பு சாகுபடியால் விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம்,அரசியல்,தொழில்,கல்வி என அனைத்து துறைகளிலும் கால்பதித்தவர். அவரது கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தால் வெற்றி நம் அருகில் வரும் என்றார். சத்தி பண்ணாரிஅம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், சத்தி காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவர் ஆர்.பெருமாள்சாமி, சக்தி சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியம், பொதிகை தொலைகாட்சி மைய இயக்குநர் ஆண்டால் பிரியதர்சினி,முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.என்.பாலசுப்பிரமணியம், எல்.பி.தர்மலிங்கம், சத்தி பண்ணாரிஅம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment