தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 1, 2014

 புன்செய் புளியம்பட்டியில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி -
2000 மாணவர்கள் பங்கேற்பு
************************************************************


 
 

புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 2:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தார்.  கோவை பாரதியார் பல்கலைகழகம் அண்ணா ஐ. ஏ. எஸ்.  பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் செல்வி நித்யா ராமசந்திரன் வெளியிட்டார். வெளியிடுகிறார். உடல்நலம் குறித்து டாக்டர் ராமசாமி, தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேலு, ரேடியோ சிட்டி சீயான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.

மேலும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக இலவசமாக வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி, பனையம்பள்ளி, காவிலிபாளையம், பெத்திகுட்டை, பட்டிமணியகாரன்பாளையம், வேமாண்டம்பாளையம், எஸ்.புங்கம்பாளையம், நல்லூர், செம்மம்பாளையம், வாலிபாளையம்,மில்மேடு, காராபாடி உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள  20 இகும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 2000 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் தலைவர் கே.தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல், வடிவேலன் மற்றும் சங்கரா கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment