பண்ணாரி அம்மன் குண்டம் விழா - கனரக வாகனங்கள் செல்லத் தடை
பண்ணாரி அம்மன் குண்டம் விழா நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக மைசூரு
செல்லும் கனகர வாகனங்கள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல்
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை கோயில் வழியாக செல்ல தடை
விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகன ஓட்டுநர்கள் புதுவடவள்ளி பகுதியில் தங்களது
லாரிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். போக்குவரத்து போலீஸாரின் இந்த தடை
உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை வரை நீடிக்கும். பால், காய்கறி வேன் போன்ற
அத்தியாவசிய வாகனங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
சேலம், ஈரோடு, அந்தியூர், பவானி, கோபி ஆகிய பகுதிகளில்
இருந்து குண்டம் இறங்க வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை புதுகுய்யனூர்
தாற்காலிக பேருந்து நிறுத்தத்திலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும்
வாகனங்கள் ராஜன் நகர் பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்த வேண்டும்.
விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்
என டிஎஸ்பி மோகன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment