திம்பம் மலைப்பாதையில் தீப்பற்றி எரிந்த லாரிகள்
தீயில் சேதமடைந்த லாரிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் |
தீயில் கருகி நாசமான மாவுபவுடர் லாரியை அப்புறப்படுத்தும் ஜேசிபி |
சத்தியமங்கலம்,மார்ச் 30:
திம்பம்
மலைப்பாதையில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில்
டீசல் டேங்க் வெடித்து சிதறியது. அப்போது, அதிலி்ருந்து வெளியேறிய
தீப்பிளம்புகள் லாரிகளில் பற்றிக்கொண்டதால் லாரிகளில் தீ கொளுந்துவிட்டு
எரிந்தது. விபத்தில் சிக்கிய ஓட்டுநர் காளிமுத்து உடல் கருகி உயிரிழந்தார்.
மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
மைசூரில்
இருந்து திருப்பூருக்கு பனியன்துணி பாரம் ஏற்றிய லாரி ஒன்று திங்கள்கிழமை
அதிகாலை திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர்
காளியமுத்து(35) ஓட்டினார். நண்பர்கள் செந்தில்(40),ஜாவூதின்(24) ஆகியோர்
உடன் வந்தனர்.
அதேபோல், நாமக்கல்லில்
இருந்து மைசூருக்கு மாவுபவுடர் பாரம் ஏற்றிய லாரி திம்பம் நோக்கி சென்று
கொண்டிருந்த போது 27-ஆவது வளைவில் லாரி பழுதாகி நின்றது. லாரியை
பங்களாபுதூரைச் சேர்ந்த பழனிச்சாமி ஓட்டினர். சிறிது நேரத்தில், அவ்வழியாக
வந்த பனியன்துணி பாரம் ஏற்றிய லாரி நின்ற லாரியின் டீசல் டேங்க் மீது மோதி
விபத்துக்கு உள்ளாகியது. அப்போது, டீசல் டேங்க் பயங்கரசப்தத்துடன் வெடித்து
சிதறியது. அதில் இருந்து வெளியேறிய தீப்பிளம்புகள் லாரிகள் மீது
விழுந்ததில் இரு லாரிகளிலும் தீப்பீிடித்து கொளுந்துவிட்டு எரிந்தன.
விபத்தின்போது, காளிமுத்துவின் கால் லாரியில் சிக்கிக்கொண்டதில் அவர்
தப்பியோட முடியாமல் இருக்கையில் அமர்ந்தபடி தீயில் கருகி உயிரிழந்தார்.
இதில் செந்தில், ஜாவூதின் மற்றும் மற்றொரு ஓட்டுநர் பழனிச்சாமி ஆகியோர்
காயமின்றி உயிர்தப்பினார்.
அங்கு
வந்த ஆசனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் எஸ்.பி.பொன்னாமலை தலைமையில்
தீயணைப்பு வீரர்கள் நீர்தாங்கி வண்டியுடன் சென்று தீயை அணைக்க போராடினர்.
விபத்தின்போது, லாரியில் இருந்த சாயம் ஏற்றப்பட்ட பனியன்துணிகள் சாலையில்
சிதறிகிடந்ததிலும் தீப்பற்றிக் கொண்டதால் அவற்றை களைத்து தண்ணீர் பாய்ச்சி
தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ பிற
பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து,
மைசூரில் இருந்து வந்த வாகனங்கள் திம்பம் மலைப்பாதையிலும் சத்தியில்
இருந்து வந்த வாகனங்கள் பண்ணாரி மலைப்பாதையிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால் இரு மாநிலங்களிடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன
.
0 comments:
Post a Comment